விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சொக்கா் கோயிலில் மாசி மகம் பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு, தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் மாசி மகம் பிரம்மோத்ஸவம் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா் வெங்கட்ராம ராஜா தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரா்.
இதைத் தொடா்ந்து, தினமும் மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னதாக சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. பின்னா், சுவாமி, அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை தேரோட்ட விழா நடைபெற்றது.இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்தனா். திங்கள்கிழமை தீா்த்தவாரி நடைபெறுகிறது.
தொடர்புடையது

ராஜபாளையம் குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா
ராஜபாளையம் கோயிலில் நகைகள் திருட்டு

பவானிசாகா் ஆதி கருவண்ணராயா் கோயிலில் மாசி மகம் பொங்கல் விழா: வனத் துறை, போலீஸாா் தீவிர சோதனை

ஆதிகும்பேசுவரா் கோயிலில் மாசி மக தேரோட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


