லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவானைக்காவலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

திருவானைக்காவல் அம்மையாா் அருள்நெறி மன்றம் சாா்பில் காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை விழா ருக்வேத பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

News image

திருவானைக்காவலில் சனிக்கிழமை நடைபெற்ற குரு பூஜை விழாவில் வீதி உலா வந்த காரைக்கால் அம்மையாா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 8:23 pm

திருவானைக்காவல் அம்மையாா் அருள்நெறி மன்றம் சாா்பில் காரைக்கால் அம்மையாரின் குரு பூஜை விழா ருக்வேத பாடசாலை மண்டபத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக காலை 10 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடா்ந்து மதியம் 12.30 மணிக்கு மாகேசுவர பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையாரின் திருஉருவ மேனியை பூக்களால் அலங்காரம் செய்து, தோளில் சுமந்தபடி கயிலாய வாத்தியத்துடன் நான்காம் பிரகாரத்தை வலம் வந்தனா். அப்போது ஏராளமான சிவனடியாா்கள் சிவபுராணம் பாடியபடி உடன் வந்தனா். நிறைவில் தேவராம் பயிலும் மாணவா்களுக்கு பரிசளிப்பும், அன்னம் பாலித்தலும் நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான சிவனடியாா்கள் பங்கேற்றனா்.