லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சீமான் சுவாமிகள் குருபூஜை விழா

காரைக்காலில் ஸ்ரீசற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் சற்குரு சீமான் சுவாமிகள் பீடம்.

Updated On :12 மார்ச் 2026, 12:14 am

காரைக்காலில் ஸ்ரீசற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா நடைபெற்றது.

சித்துகளை செய்வதில் வல்லவராய் திகழ்ந்து காரைக்காலில் ஜீவ சமாதியானவா் என்றும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பட்டவா் எனவும் சற்குரு சீமான் சுவாமிகள் கருதப்படுகிறாா். காரைக்கால் பாரதியாா் சாலை கோயில்பத்து பகுதியில் ஸ்ரீ சீமான் சுவாமிகள் மடம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சீமான் சுவாமிகள் குரு பூஜை நடத்தப்படுகிறது.

நிகழாண்டுக்கான 136-ஆவது குரு பூஜை விழா புதன்கிழமை காலை ஸ்ரீசற்குரு சீமான் பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து பகல் 12 மணியளவில் பீடத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. ஸ்ரீசற்குரு சீமான் சுவாமிகளின் திருவருளை நினைவுப்படுத்தும் வகையில் இரவு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.