இந்தவகையில், பல்கூட்டு ஈமச்சின்னங்களை கீழ்க்கண்டவாறு அமைக்கமுடியும் என்ற ஒரு கொள்கை முடிவை உருவாக்கலாம். அதாவது, “இரு முதன்மை உறுப்புகள் மற்றும் அரண் உறுப்புகளும் அலங்கார உறுப்புகளும் இணைந்து ஒரு பல்கூட்டு ஈமச்சின்னத்தை அமைக்கின்றன. இவ்வமைப்பில் முதன்மை அலகான குழியானது தாழி, பேழையுடன் இணைந்தும், தாழியும், பேழையும் ஆகிய இரு முதன்மை அலகுகளும் கல்பதுக்கை, கல்திட்டை, கல்பதுக்கை போன்ற கல்திட்டை ஆகியவற்றுடன் இணைந்து அரணுறுப்புகளான, கல்நிரவல், கல்சுவர் மற்றும் அலங்கார உறுப்புகளான உருளைக் கல்வட்டம், பலகைக் கல்வட்டம், மண்குவை, கற்குவை, கற்குவை திரள், பரல் உயர் அடுக்கு, குத்துக்கல் போன்றவை இடம்பெறுகின்றன”.