இவ்வகையில் முதன்மைச் சின்னமாக “கல்பதுக்கை” இடம்பெறுகிறது. தாழிக்கு மேல் அடையாளமாக கல்மூடி வைப்பதுபோல், கல்பதுக்கைக்கு மேல் நிலமட்டத்தில் அடையாள உறுப்பாக கல்மூடி வைக்கப்பட சின்னத்தை அறியமுடியவில்லை. மண் அரிப்பு அல்லது பிற காரணங்களால் கல்பதுக்கையின் கல்லறையின் மீது வைக்கப்படும் மூடுகல் வெளியே தெரிவதுண்டு. இது கல்லறையின் ஒரு உறுப்பே அன்றி, கல்லறைக்கு மேல் இடம்பெறும் மற்றொரு தனி உறுப்பல்ல என்பதை நினைவில் கொள்வோம். ஆனால், மேல் அலங்கார அல்லது அரணுறுப்பாக கல்சுவர் அல்லது உருளைக் கல்நிரவல், கற்பலகை வட்டம், மண்குவை, கற்குவை, கற்குவை திரள், பரல் உயர் அடுக்கு என இடம்பெற்ற சின்னங்களைக் காணமுடிகிறது.