

பாடல் - 7
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன்தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்தனை
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொல்மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம், என்ன குறை நமக்கே?
என்றும் தனித்துவமாகத் திகழ்கிறவன், தனக்கு இணையாகவோ, தன்னைவிடச் சிறந்தவர்களாகவோ யாரும் இல்லாதவன், ஒப்பற்றவன், எல்லா உலகங்களையும் ஆட்சிசெய்பவன், கோவர்த்தன மலையைத் தாங்கி நின்று அதனால் ஆயர்களை, பசுக்களை மழையிலிருந்து காத்தவன், அத்தகைய பெருமானுக்குச் சொல்மாலைகளைச் சூட்டிப் போற்றும் அருள் நமக்குக் கிடைத்தது, இனி நமக்கு என்ன குறை? (ஏதுமில்லை.)
******
பாடல் - 8
நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை, ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை, தண்தாமரை
சுமக்கும் பாதப் பெருமானை சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனி யாவர் நிகர் அகல் வானத்தே?
நமக்கும், தாமரைப்பூவிலே வீற்றிருக்கும் திருமகளுக்கும் இனியவன், உலகத்தவர் அனைவருக்கும், வானத்திலுள்ள தேவர்களுக்கும் தலைவன், அவனுடைய திருவடிகளைக் குளிர்ந்த தாமரைகள் தாங்கிநிற்கும், அத்தகைய பெருமானைச் சொல்மாலைகளால் போற்றும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது, அகன்ற வானத்திலே இனி எனக்கு யார் நிகர்? (யாருமில்லை.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

