நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 4:59 pm

Syndication

கிருஷ்ணகிரி: தமிழக அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் மோகன்ராம் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பாடி செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவேரிப்பட்டணத்தில் அண்மையில் நடைபெற்ற அங்காளம்மன் கோயில் திருவிழாவின்போது, பொதுமக்களை ஆயுதங்களால் தாக்கிய கும்பலை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், காவேரிப்பட்டணத்தில் சட்டம்- ஒழுங்கை காப்பாற்ற தவறிய தமிழக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலா், அங்கு வைக்கப்பட்டிருந்த திமுக பதாகையை கிழித்து அப்புறப்படுத்த முயன்றனா். இதை, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் தடுக்க முயன்ால் அங்கு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.