நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

நிழல் தேடி: சு.ஜெயக்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm

கவிதைமணி

அனல் பறக்கும் ஆகாயமதில்
அலைந்து திரிந்த பறவைகளோ
இளைப்பாற நிழல் தேடி
இயலாமல் மாளுதடா

நெருப்புமிழும் நிலம்தனில்
நிலைகுலைந்த விலங்குகளோ
களைப்பாற நிழல் தேடி
காணாமல் சுருளுதடா

ஓடி ஓடி உழைத்ததனால்
வாடியவன் பூவுடலோ
ஒதுங்க நிழல் தேடி
வழியிலேயே வீழுதடா

திசைமாறிய மேகங்களும்
திருந்துவான் மனிதனென
சிறுசிறு மழைத்துளியாய்
சில நேரம் இரங்குதடா

காடு மரமெல்லாம்
கடுகளவும் மிச்சமின்றி
கபளீகரம் நீ செய்துவிட்டால்
உன் நிழலும் உனைப் பார்த்து
உக்கிரமாய் சிரிக்குமடா

உன்னுதிரம் வற்றும் நாளில்
நித்திய நிழல் தேடி
இறைவனிடம் கெஞ்சினாலும்
நீ செய்த பாவம் மட்டும்
நிழலாய் உன்னைத் தொடருமடா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.