திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு: -ரெத்தின.ஆத்மநாதன், 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

காளையுடன் மல்லுக்கட்டும் காளையரே கணவரென்று கன்னிப் பெண்களெல்லாம் காத்திருந்த காலமுண்டு!தெருவுக்கு ஒருவரேனும் சீர்மிகு பிள்ளை போல காளையை வளர்ப்பதுண்டு இங்கு காலங் காலமாய்!ஜல்லிக் கட்டுக்கென்றே இளைஞர்கள் வெகுவாய்தவங்கிடந்து உடல்பேணி தகுதிபெற்றுத் திகழ்ந்திடுவர்!அலங்காநல்லூரே ஜல்லிக்கட்டின் ஆரம்ப நல்லூராய்வரலாற்றின் பக்கங்களில் வைரமாய் மின்னி ஜொலிக்கும்!காளையரே இக்களி விளையாட்டில் காயம் மிகப்பட்டுஇன்னுயிரை ஈந்த இரக்கக் கதைகள் பலவுண்டு!கோர்ட்டார், காளைக்குப் பங்கம் விளைவிப்பதாய்கழறுவதைப் பார்த்தால் சிரிக்கத்தான் தோன்றுதையோ!'ஏறு தழுவுதல்'என்றே ஏடுகள் ஜல்லிக்கட்டை ஏகமாய்ப் புகழ்வதை எடுத்தியம்பி வாதிடணும்!'காளையை அணைத்தல்'என்றே இதன் பொருள் என்பதனைகனம் கோர்ட்டாரின் காதுகளில் ஓத வேண்டும்!அயல் நாட்டினர்கூட அலங்கா நல்லூருக்கு ஆண்டு தோறும் வருவதுண்டுஅமைதியாய்க் கண்டுகளிக்க!இன்றோ!மத்திய அரசு மல்லுக் கட்டுகிறது!உச்ச நீதி மன்றமோ ஒத்துக் கொள்ள மறுக்கிறது!கல்லூரிக் காளையரும் கன்னியரும் இளைஞர்களும் ஜல்லிக்கட்டு கேட்டு மல்லுக்கட்ட ஆரம்பித்துள்ளனர்!பாரம்பரியத்தை பண்பாட்டை பல்லாயிரக் கணக்கோரின் விருப்பத்தை ஈடேற்றுமா விளங்கும் இரு அரசுகளும்?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.