இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

சூரிய தாகம்: பூ.சுப்ரமணியன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

ஏரி குளம் கிணற்றுநீர்
வாரிக் குடித்த பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

ஏழையின் நரம்புபோல்
ஈரம் காணாத நிலம்
வெடிப்பு கண்ட பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

கங்கைநீர் சுமந்து செல்லும்
மங்கையர் குடம் கூட
தண்ணீரின்றி ஆடுவதை
கண்ணால் கண்டபின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

தண்ணீர் தாகம் தணிக்க  
காட்டில் சுற்றித் திரியும்
யானைகள் மான்கள்
வீட்டினைச் சுற்றி சுற்றி
சட்டி பானை உருட்டுவதை
எட்டிப் பார்த்த பின்னும்
சூரியனே உன் தாகம்
தணியவில்லையா ?

சூரியனே உன் தாகம்
தணிக்க குறைய
விண்ணிலே காட்டு
மண்ணிலே காட்டாதே !

விண்ணிலே
கருமேகங்களை கூட்டி
உயிர்கள் தாகம் தணிக்க
ஏரி குளம் நீரால் நிரப்பு !!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.