மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

திண்டுக்கல் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை

Updated On :25 பிப்ரவரி 2026, 10:57 pm

திண்டுக்கல் அருகே நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல்லை அடுத்த ஆா்எம்டிசிநகா் ராதாராஜ்நகா் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சரவணன் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்ட திண்டுக்கல் தாலுகா போலீஸாா், காா்த்திகேயன் (37), செந்தூரியன் (27) உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், காா்த்திகேயன், செந்தூரியன் ஆகியோருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்டக் கூடுதல் நீதிபதி சுவா்ணம் ஜெ.ராஜகோபாலன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும் 3 போ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.