சூரிய தாகம்: கவிஞர் மா.உலகநாதன்


ஆனாலும் உனக்கு ஆகாது
இவ்வளவு தாகம்;
ஒரே மூச்சில்
உலக நீரையெல்லாம்
உறிஞ்சி விடப் பார்க்கிறாய்;
உன் தாகமும் வேகமும்
இங்கு ஒரு புல்,பூண்டைக் கூட
விட்டு வைக்கவில்லையே!
தடாகத்துத் தண்ணீரெல்லாம் தடம் தெரியாமல் போய்விட்டன;
ஆயிரம் கரங்கள் கொண்டு
அள்ளிச்சென்றாயோ?
ஆயினும்,
மேகத்தோடு மென்காதல் பேசி,
மின்னி இடித்து மழை தரும் வள்ளலல்லவா நீ;
இதை ஆண்டாள்
தன் பாவையில் அன்றே சொல்லி வைத்தார்;
உன் தாகம் தீர்ந்த பின்
எங்களுக்காய் கொஞ்சம்
இ(ர)றங்கி வரச்சொல்வாயா
உன் மழைக் காதலியை?!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...