இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கைகோர்ப்போம்: பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

ஒரு கை 
ஓசை எழுப்பாது.
இரு கை
என்றும் ஓயாது.

இணைந்த கைகளே
இலக்கை எட்டும்.
எதிர்ப்பவர்களை
என்றும் விரட்டும்.

அவரவர் பிரச்சனைக்கு
அவரவர் நடத்துகின்றனர்
போராட்டம்.
அவ்வவ்போது நடத்துகின்றனர்
ஆர்ப்பாட்டம்.
அரசுச் செய்கிறது
அலட்சியம்.

கண்டு கொள்ளாமல்
நாமிருந்தால்
நாம் போராடும் போது
தனித்திருப்போம்.

கை கோர்த்தால்
கை கூடும் என்பதற்கு
முன்னுதாரணம்
மெரினா போராட்டம்.

கோரிக்கையாளர்களுடன்
கை கோர்ப்போம்.
கை கூடி வரும் வரை
களம் காண்போம்.
ஒரு கை பார்ப்போம் என்போரை
ஓரம் கட்டுவோம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.