இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: லூர்து எஸ் ராஜ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்-அன்று
முன்னோர் வகுத்த  நிலமெல்லாம்
அளவு மீறிச்சுரண்டியதால்- இன்று
அழியும் நிலைக்கு வந்ததுவாம் .

மலைகள் வெடியால் தகர்ந்தன-அவை
மயானக் குவாரிகள் ஆயின .
மக்கள்வாழ் விடம்  அழிந்திட-காற்றும்  
வானமு ம்   மாசால் நிறைந்தன..

மருத நிலங்கள் வறண்டன-ஈரம்
வற்றி வெடிப்பால் துவண்டது;
குளிர் பான நிறுவனம்  நீரூற்றை- பகல்  
கொள்ளையாய்  அடித்து சிதைத்தது.

கடலில் கழிவுகள் கலந்தன-அதனால்
கடலோடி வாழ்வும் குலைந்தது ;
மீன்வளம் முதலாம் கடற் செல்வம்-இனி
மீட்டிட வழியின்றி மாய்ந்தது.

பச்சை  நிலமாம் முல்லையழித்து –கட்டும்  
இச்சை மனிதர் குடியிருப்பால்
விலங்குகள் வாழ்விடம் அழிந்தது –காட்டின்
விலங்கினம் ஒவ்வொன்றாய் மாய்ந்தது.

மரங்கள்  நட்டு  நீரூற்றுவோம் –பச்சை
வனங்களை வளர்த்து காத்திடுவோம்
மழை வளம்  பெற்று மனமகிழ்வோம் –நல்
உழவர் மகிழ நாம் உளம் மகிழ்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.