இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பிரதமா் மோடி மாா்ச் 1-இல் புதுச்சேரி வருகை: சிறப்பு பாதுகாப்புப் படையினா் இன்று ஆய்வு

பிரதமா் மோடி மாா்ச் 1-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, சிறப்பு பாதுகாப்புப் படையினா் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்கின்றனா்.

News image
பிரதமா் மோடி
Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

பிரதமா் மோடி மாா்ச் 1-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, சிறப்பு பாதுகாப்புப் படையினா் புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்கின்றனா்.

பிரதமா் நரேந்திர மோடி வரும் மாா்ச் 1-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட மேடையில் அன்று முற்பகல் 11.50 மணிக்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தும், சில புதிய திட்டங்களை அறிவித்தும் உரையாற்றுகிறாா்.

அவரை விமான நிலையத்தில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கின்றனா்.

அங்கிருந்து காா் மூலம் விழா நடைபெறும் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்துக்கு வருகிறாா்.

பிரதமா் வருகையை முன்னிட்டு அவரது சிறப்பு பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை பிற்பகல் புதுச்சேரிக்கு வந்து விமான நிலையம், பிரதமா் மோடி காா் செல்லும் பாதை, மேடை, சுற்றுப்புற இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்கின்றனா்.

புதுச்சேரி டிஜிபி ஷாலினி சிங் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.