இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: மு.செல்வராசன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

பச்சைநிலம் இந்நாளில் பாழ்ங்காடாய்ப் போனதற்கு 
இச்சைமிகக் கொண்டார் இழிசெயலாம் -----சிச்சீசீ 
அச்சமின்றி அத்தகைய தீயவரைக் கண்டால்நீ 
எச்சிலைக்  காறி உமிழ். 

உச்சந்   தலைமுதலாய்  உள்ளங்கால்  ஈறாக 
நச்செனச்  சுட்டெரிக்கும் நாள்வெயிலில் -----அச்சச்சோ
ஓயா(து)   உழைக்கும் உழவர் அருஞ்செயலால் 
நாவார  உண்கின்றோம் நாம்.

பெற்ற  குழந்தைபோல்  பேணிவந்த  பச்சைநிலம் 
வெற்றுத்   தரிசாகும் வேதனையால் -----கற்றா
மனம்போல் கசிந்துருகும் மண்ணின் உழவர் 
இனம்கண்டு  கைகொடுப்பீர்  இன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.