இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: பூ. சுப்ரமணியன் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

‘கொக்கரக்கோ’ சேவல் கூவின 
கண்மணிகளைக் காவல் காத்த 
கண்இமைகள் திறந்தவுடன்  
என் வீட்டுவாசலைத் திறந்து
நின்று பார்த்தேன் !

கண்ணுக்கெட்டிய தூரம்
எங்கும் பச்சைக் கம்பளம்
விரித்துப் போட்டது யார் ?
இயற்கை விரித்த பச்சைநிலமா ?

பச்சை நிலத்தில் காணும்
பசுமை நாற்றின் நுனியில் 
வைரக் கிரீடங்களாக
மார்கழி பனித்துளிகள் !

கலப்பையுடன் உழவர்கள் 
கஞ்சிக்கலயத்துடன் பெண்கள்
கொஞ்சி விளையாடும் கிளிகள்
மகிழ்வுடன் பறக்கும் நாரைகள்
எல்லாமே பச்சை நிலத்திலே 
நான் 
கண்டு மகிழும்போது....
‘ வறட்சி நிவாரணம் வழங்கு ‘
விவசாயின் உரத்த குரல்
கேட்டு விழித்தேன். 

இறைவா !
எல்லாமே பகல் கனவு 
எதிரே பார்த்தேன் 
பச்சை நிலங்களெல்லாம் 
பல மாடிக் கட்டிடங்களாக 
விளைந்து நின்றன !  .  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.