இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

போட்டது முளைத்தது
எங்க பாட்டன் காலத்தில் 
பஞ்சம் பசி பட்டினி  ஏதும்
கொஞ்சமும் நெருங்கவில்லை
இட்டதெல்லாம் இயற்கை உரம்
எப்போதும் பச்சை தான் எங்கநிலம்

எங்கிருந்தோ வந்தது
எமனாக சீமைக் கருவேல்
வெட்ட வெட்ட வளர்ந்தது 
வீதியெங்கும் முளைத்தது 
தண்ணீரையெல்லாம் உறிஞ்சதால
கருகிருச்சே பச்சை நிலம்.

விளைச்சல் குறைஞ்சதால
சொன்னாங்களே பல வழி
அதைக்கேட்டுப் போட்டோமே
ரசாயன உரத்தை அள்ளி
மண்ணு மலடாச்சு
எங்க வயல் வீட்டு மனையாச்சு.

நெல்லு கரும்பு என
பொன்னா விளைஞ்ச பூமி
கல்லா முளைச்சிடுச்சி
ரசாயன உரமும் கருலேல மரமும்
கருவ அறுத்த பின்னே
எங்கே இருக்கும் என் பச்சை நிலம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.