இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

சோறு தண்ணீர் இல்லாமல் 
சோர்ந்திருக்கும்
நூறு வயது கிழவியின்

தளருடல் முழுவதும் 
தோல்வறண்டு
ரேகைகள் நெளிவதுபோல்

வெடித்து மல்லாந்து கிடக்கிறது
வயல்வெளி !

பசும்புல் தேடி
ஏமாந்து திரும்பும்
எங்களூர் மாடுகள்
காகிதம் தின்னக்
கற்றுக்கொண்டன.

பச்சைப் புற்களையும்
பசும் மூங்கில்களையும்
ஞெகிழியில் செய்து
வீட்டுக்குள் தோட்டமிட்டு
விழிகளை ஏய்க்கிறார்கள்.

இனி
ஓவியத்தில் மட்டுமே
பார்க்க முடியுமாம்
பச்சை நிலத்தை.

முன்னறி ஞானம்கொண்ட எங்கள்
முன்னோர்கள்
காகிதத்தில் செய்த
மாவிலைத் தோரணத்தைக்
கண்டுபிடித்துவிட்டார்கள்
கடந்த நூற்றாண்டில்

மெழுகுத் தாளில் தயாரித்த
வாழை இலையில் 
மணவிருந்து பரிமாறுகிறோம் நாம்
இந்த 
நூற்றாண்டில்

நாளைய
சருகு தேசத்தில்
பச்சை நிலம்காண முடியும்
என்கிறார் உளமருத்துவர், 
மாயக்காட்சி காணும்
மனப்பிறழ்வு நோயிருந்தால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.