இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பச்சை நிலம்: கவிஞர் டி.கே. ஹரிஹரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

பச்சைப்பசேலென்றிருக்கும்
விளைநிலத்தைக்
காண்பிக்கச் சொன்னாள் மகள்.
நகரச் சந்தடியிலிருந்து
தொலைதூரம் அழைத்துச்செல்ல
இருசக்கர வாகனத்தில் பயணம்.

கண்ணுக்கெட்டிய தூரம்
கான்கிரீட் கலவைகளால்
பின்னப்பட்ட கட்டடங்கள்.

மருந்துக்கும் சாலையிருபுறம்
மரமில்லை,செடியில்லை,கொடியில்லை
மாடிகளில் தொங்கும் பிளாஸ்டிக் குரோட்டன்ஸ்.

விதவித வண்ணங்கள் பூசப்பட்ட
கலைநயமிக்க கட்டடங்கள்
இயந்திரத்தனமாய் விரையும் மனிதர்கள்.

காலைமுதல் மாலைவரை
திக்குகள் பரவித் தேடியும்
அகப்படவில்லை பச்சைநிலம்.

மகள் கண்களில் ஏமாற்றம்
யார்கொணர்வர் பெருமாற்றம்
சிந்தையில் ஆழ்ந்த மனம்.

அரைத்தூக்கத்திலிருந்த என்னைத்
தட்டியெழுப்பினாள் மகள்,
தாள் ஒன்றை நீட்டினாள்.

கண்ணைக் கசக்கிக் கண்டேன்
கச்சிதமாய் சாலையிருபுறமும்
பச்சைநிலம் சூழ்ந்த வண்ணச் சித்திரம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.