நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

புதையல்:  பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

புதையல் தேடியே
கழிந்து கொண்டுள்ளது
மனிதர்கள் வாழ்க்கை.

தேடுபவர் அனைவருக்கும்
தென்படுவதில்லை 
புதையல்.

காலடியில் கிடந்தாலும்
கண்ணில் படுவதில்லை
சிலருக்கு புதையல்.

இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
புதையலுக்காக 
அலைபவரும் உண்டு.

தேடுபவர் எல்லோருக்குமே
கிடைத்தும் விடுவதில்லை
புதையல்.

புதைத்து வைத்தவர்கள்
மரணித்து போனதால்
புதையுண்டே கிடக்கின்றது
புதையல்.

இயற்கையாக மண்ணுக்குள்ளும்
மறைந்து கிடக்கின்றன
பற்பல புதையல்.

மண்ணுக்கு மேலேயும்
மனிதர்கள் அறியாமல்
பரவிக் கிடக்கிறது
புதையல்.

தேடினால் 
எல்லோருக்குமே கிடைக்கும்
அழிவில்லா
அளவற்ற
அன்புப் புதையல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.