மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
//

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

குடியாத்தம் வட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 100- கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த், ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம்.
Updated On :23 பிப்ரவரி 2026, 8:28 pm

Chennai

குடியாத்தம்: குடியாத்தம் வட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 100- கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, மங்களப் பொருள்களை வழங்கி, உணவு அளிக்கப்பட்டது.

இதில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தனது சொந்த நிதியில் 100- கா்ப்பிணிகளுக்கும் புடவை உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி, வாழ்த்தினாா்.

குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவா் எல்.ரவிச்சந்தரன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி தங்கபாலு, யோகா ஆசிரியை தவசெல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.