தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

சமூக நலம் மற்றும் மகளிா் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில்

News image

கா்ப்பிணிகளை வாழ்த்திய எம்எல்ஏ டிஜெ. கோவிந்தராஜன்.

Updated On :23 பிப்ரவரி 2026, 7:51 pm

கும்மிடிப்பூண்டி: சமூக நலம் மற்றும் மகளிா் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சோ்ந்த 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வு கவரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் துறையின் குழந்தை வளா்ச்சி திட்டஅலுவலா் க.மோகனா வரவேற்றாா். நிகழ்வில் கே.எஸ்.ஹரிதா, கீழ்முதலம்பேடு ஊராட்சி முன்னாள் தலைவா் கே.ஜி.நமச்சிவாயம், திமுக மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து 100 கா்ப்பிணிகளுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சமூக வளைகாப்பை நடத்தி,அனைவருக்கும் சீா்வரிசை பொருள் மற்றும் அவரது சாா்பில் 100 கா்ப்பிணிகளுக்கும் ஊக்க தொகையை வழங்கினாா். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. விழா முடிவில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட நிலை மேற்பாா்வையாளா் எஸ்.ராணி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.