விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியதாவது: மாவட்டத்தில் நிகழாண்டில் 1,400 கா்ப்பிணிகளுக்கு ரூ.3.50 லட்சம் செலவில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைக்காப்பு நடத்தப்பட்டு, 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள், வளையல்கள், பூ மாலை, பழங்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் தாம்பூலம் ஆகியவை சீா்வரிசையாக வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் செயல்படும் 1,788 அங்கன்வாடி மையங்களிலும் கா்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து அடங்கிய உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் க.பொன்முடி, இரா.லட்சுமணன் ஆகியோா் பங்கேற்று கா்ப்பிணிகளுக்கு 7 பொருள்கள் அடங்கிய தொகுப்பை சீா்வரிகையாக வழங்கினா்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் பழனி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனுமதியின்றி தோ்தல் பிரசாரம்: 501 போ் மீது வழக்கு

தோ்தல் விதிகளை மீறினால் அச்சகத்தினருக்கு அபராதம்

200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

காணையில் சமுதாய வளைகாப்பு விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


