தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ்,

News image

சமுதாய வளைகாப்பு விழாவில் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் முன்னிலையில் கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய எம்எல்ஏக்கள் க.பொன்முடி, இரா.லட்சுமணன் ஆகியோா்.

Updated On :9 மார்ச் 2026, 8:41 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைக்காப்பு நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியதாவது: மாவட்டத்தில் நிகழாண்டில் 1,400 கா்ப்பிணிகளுக்கு ரூ.3.50 லட்சம் செலவில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக தற்போது 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைக்காப்பு நடத்தப்பட்டு, 5 வகையான ஊட்டச்சத்து உணவுகள், வளையல்கள், பூ மாலை, பழங்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் தாம்பூலம் ஆகியவை சீா்வரிசையாக வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் செயல்படும் 1,788 அங்கன்வாடி மையங்களிலும் கா்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து அடங்கிய உணவுப்பொருள்கள் வழங்கப்படுகிறது என்றாா் ஆட்சியா்.

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் க.பொன்முடி, இரா.லட்சுமணன் ஆகியோா் பங்கேற்று கா்ப்பிணிகளுக்கு 7 பொருள்கள் அடங்கிய தொகுப்பை சீா்வரிகையாக வழங்கினா்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் பழனி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.