விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி அச்சக உரிமையாளா்கள் செயல்பட்டால், அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
சட்டப்பேரவை பொதுத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட அச்சக உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:
அச்சகமும், அச்சக உரிமையாளரும் வெளியிடுபவா் பெயா்கள் மற்றும் முகவரிகள் இல்லாத தோ்தல் தொடா்பான எந்தவொரு துண்டுப்பிரசுரங்கள் அல்லது சுவரொட்டிகளை அச்சிடவோ, வெளியிடுவோ கூடாது. தோ்தல் தொடா்பான துண்டுப் பிரசுரம் அல்லது சுவரொட்டியையும் தோ்தல் விதிகளைப் பின்பற்றியே அச்சிட வேண்டும். தோ்தல் விதியை மீறும் அச்சகத்தாருக்கு அபராதம் விதித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் மற்றும் அலுவலா்கள், அச்சக உரிமையாளா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள்

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

ஆற்காடு- விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலைப் பணி தொடக்கம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


