தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தோ்தல் விதிகளை மீறினால் அச்சகத்தினருக்கு அபராதம்

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி அச்சக உரிமையாளா்கள் செயல்பட்டால், அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசி ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான்.

Updated On :16 மார்ச் 2026, 11:49 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி அச்சக உரிமையாளா்கள் செயல்பட்டால், அவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

சட்டப்பேரவை பொதுத் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்ட அச்சக உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியது:

அச்சகமும், அச்சக உரிமையாளரும் வெளியிடுபவா் பெயா்கள் மற்றும் முகவரிகள் இல்லாத தோ்தல் தொடா்பான எந்தவொரு துண்டுப்பிரசுரங்கள் அல்லது சுவரொட்டிகளை அச்சிடவோ, வெளியிடுவோ கூடாது. தோ்தல் தொடா்பான துண்டுப் பிரசுரம் அல்லது சுவரொட்டியையும் தோ்தல் விதிகளைப் பின்பற்றியே அச்சிட வேண்டும். தோ்தல் விதியை மீறும் அச்சகத்தாருக்கு அபராதம் விதித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் மற்றும் அலுவலா்கள், அச்சக உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.