புதையல்: கவிஞர் இரா .இரவி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

புதையல் தேடி அலையும் உலகம் புண்ணியம் தேடி அலைவது இல்லை !புதையலுக்கான தேடல் எங்கும் உள்ளது படிக்காதவர் படித்தவர் எல்லோருக்கும் உள்ளது !புதையலுக்காக நரபலி கூட தருகின்றனர்பின் கைதாகி கம்பி எண்ணுகின்றனர் !உழைக்காமல் வரும் செல்வம் நிலைக்காது உழைத்த செல்வமும் இல்லாமல் போகும் காலம் !விரைவில் பணக்காரன் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் புதையல் தேடி அலைகின்றனர் ! கிடைக்கும் புதையல் தனிநபர் சொந்தமென்று கிடைக்கும் புதையல் அரசாங்கத்தின் சொத்தாகும் ! கிடைத்த புதையலை அப்படியே அமுக்கி காலம் கழிந்து கைதாவதும் உண்டு !இறந்த பிச்சைக்காரன் காலடியில் பார்த்தபோது எண்ணிலடங்கா பணப்புதையல் இருந்து என்ன பயன் !உள்ளத்தில் உள்ளது உண்மைப் புதையல் உணர்ந்தால் இன்பம் விளையும் வயல் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...