பணத்தின் மறுபக்கம்: கவிஞர் இரா .இரவி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

பணத்தின் மறுபக்கம் உழைப்பு உள்ளன பண்போடு உழைத்துப் பணம் ஈட்டுகின்றனர் !அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்திட அவசியம் தேவைப்படுகின்றது பணம் !நேர்மையான வழியில் வந்த பணம் நிம்மதியான துக்கம் தந்து மகிழ்விக்கும் !குறுக்கு வழியில் வந்த பணம் குதூகலத்தை அழித்துக் கவலை தரும் !பணம் ஈட்டுவது தவறில்லை ஆனால் பணம் பணம் என்று அலைவது தவறு !வந்த வருமானத்தில் சிறு பகுதியாவது வறியவர்க்கு உதவி செய்திட வேண்டும் !ஏழைகளுக்கு உதவுவதில் இன்பம் உண்டு ஈந்துப் பாரத்தால் அவ்வின்பம் தெரியும் !வாரி வழங்கிடும் வள்ளல் ஆகாவிடினும் வழங்கவே வழங்காத கஞ்சனாக வேண்டாம் !பணத்தைவிட உயர்வானது நல்ல குணம் பணக்காரனைவிட நல்லவனே என்றும் வாழ்வான் !மனிதாபிமானம் மனதில் என்றும் இருக்கட்டும் மனிதனைவிட பணம் என்றும் பெரிதல்ல !அரசாங்கத்தால் அச்சடிக்கப்பட்ட காகிதம்தான் அதைத்தாண்டி வேறு ஏதும் சிறப்பில்லை !பணத்தாசையால் பலர் நிம்மதி இழந்தனர் பணத்தாசையால் பலர் உறக்கம் இழந்தனர் !ஆசையே அழிவுக்கு காரணம்என்றார் புத்தர் ஆசையை அழிக்காவிடினும் குறைத்து வாழ்வோம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...