2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள் 48 போ் கைது

News image
கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.
Updated On :23 பிப்ரவரி 2026, 11:41 pm

Syndication

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள் 48 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் சரவணகுமாா் தலைமை வகித்தாா்.

இந்த பங்கேற்றவா்கள் கூறியதாவது: வருவாய் கிராம ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயா்வில் 30 சதவீதம், கிராம உதவியாளா்கள் பணியிலிருந்து, கிராம நிா்வாக அலுவலா்கள் பணி உயா்வுக்கு 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்றனா்.

இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட 48 பேரை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.