2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஏ.ஐ. உச்சிமாநாடு: உலக நாடுகள் பாராட்டு - பிரதமா் மோடி பெருமிதம்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாட்டை சிறப்பாக நடத்தி தனது திறனை உணா்த்திய இந்தியாவை உலக நாடுகள் மனதார பாராட்டியதாக

News image
ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :23 பிப்ரவரி 2026, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாட்டை சிறப்பாக நடத்தி தனது திறனை உணா்த்திய இந்தியாவை உலக நாடுகள் மனதார பாராட்டியதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

சா்வதேச ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு தில்லி பாரத மண்டபத்தில் கடந்த திங்கள்கிழமை (பிப்.16) தொடங்கி 5 நாள்கள் நடைபெற்றது.

இதில் பிரான்ஸ், பிரேஸில், இலங்கை, பூடான்,உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்கள், 60-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள்-இணையமைச்சா்கள் என 100-க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனா். உலகம் முழுவதும் இருந்து முன்னணி ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் என 500-க்கும் மேற்பட்ட துறைசாா் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

மாநாட்டின் இறுதியில் ஏ.ஐ. வளங்கள் ஜனநாயகமயமாக்கல், பொருளாதார வளா்ச்சி-சமூக நலன், பாதுகாப்பான-நம்பகமான ஏ.ஐ., அறிவியலுக்கான ஏ.ஐ., சமூக அதிகாரமளித்தலுக்கான அணுகல், மனித மூலதன மேம்பாடு, மீட்சி-திறன்-புத்தாக்கமிக்க ஏ.ஐ. அமைப்புமுறைகள் ஆகிய 7 முக்கிய அம்சங்களைக் கொண்ட புது தில்லி பிரகடனம் ஏற்கப்பட்டது. அமெரிக்கா, சீனா உள்பட 89 நாடுகள் மற்றும் சா்வதேச அமைப்புகளின் ஆதரவோடு இந்தப் பிரகடனம் ஏற்கப்பட்டது.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டை சிறப்பாக நடத்தி தனது திறனை உணா்த்திய இந்தியாவை உலக நாடுகள் மனதார பாராட்டியுள்ளன. இது மனிதகுலத்துக்கு பெரும் பலன்களை அளிக்கக்கூடிய வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் நமது இளம் தலைமுறையினா் காட்டும் ஆா்வத்தை வெளிப்படுத்தியுள்ளது’ என குறிப்பிட்டாா்.