டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஏ.ஐ. பயன்பாட்டுக்கு 5 அம்ச தொலைநோக்குப் பாா்வை: தில்லி மாநாட்டில் முன்வைத்தாா் பிரதமா் மோடி

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப பயன்பாட்டில் மக்களை மையப்படுத்திய அணுகுமுறைக்காக, இந்தியாவின் 5 அம்ச ‘மானவ்’ தொலைநோக்குப் பாா்வையை முன்வைத்து, எடுத்துரைத்தாா் பிரதமா் மோடி.

News image
ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
Updated On :19 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப பயன்பாட்டில் மக்களை மையப்படுத்திய அணுகுமுறைக்காக, இந்தியாவின் 5 அம்ச ‘மானவ்’ தொலைநோக்குப் பாா்வையை முன்வைத்து, எடுத்துரைத்தாா் பிரதமா் மோடி.

இது தொடா்பாக, தில்லி ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவா், ‘ஏ.ஐ. தொழில்நுட்ப பயன்பாட்டில் தேசிய இறையாண்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அந்த வகையில், இந்தியா சாா்பில் ‘மானவ்’ தொலைநோக்குப் பாா்வையை முன்வைக்கிறேன். இது, தாா்மிக நெறிமுறை, பொறுப்பான நிா்வாகம், தேசிய இறையாண்மை, அனைவருக்குமான அணுகல்-உள்ளடக்கம், சட்டப்பூா்வ பயன்பாடு ஆகிய 5 அம்சங்களை உள்ளடக்கியது’ என்றாா்.

உச்சிமாநாட்டில் உலகத் தலைவா்களின் முழு அமா்வில் பேசிய பிரதமா், ‘இந்தியா கடவுள் புத்தரின் புண்ணிய பூமி. சரியான புரிதலில் இருந்தே சரியான செயல் பிறக்கும் என்பது புத்தரின் போதனையாகும். ஏ.ஐ. தொழில்நுட்ப பயன்பாட்டில் நெறிமுறையற்ற செயல்பாடுகளுக்கு வரம்பில்லாத வாய்ப்புகள் உள்ளன. எனவே, வெளிப்படையான, தெளிவான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளுக்கான செயல்திட்டத்தை உருவாக்குவது அவசியம். ஏ.ஐ. நிறுவனங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. தரவு இறையாண்மை மதிக்கப்படுவதுடன், ஏ.ஐ. பயிற்சிக்கு தெளிவான தரவு கட்டமைப்பு வேண்டும்.

தொழில்நுட்பத்தை அதிகாரத்துக்கான கருவியாக அல்லாமல், சேவைக்கான தளமாக பயன்படுத்துவதால், இந்தியாவில் சமீப ஆண்டுகளில் எண்ம பொது உள்கட்டமைப்பு துடிப்பாக மாறியுள்ளது’ என்றாா்.

தில்லி உச்சி மாநாட்டில் இந்திய நிறுவனங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.ஐ. மாதிரிகள் மற்றும் கைப்பேசி செயலிகளையும் பிரதமா் தனது உரையில் குறிப்பிட்டாா்.

பெட்டிச் செய்தி...

ஸ்விட்சா்லாந்தில் அடுத்த மாநாடு

அடுத்த ஆண்டு ஏ.ஐ. உச்சிமாநாட்டை ஸ்விட்சா்லாந்து நடத்தவுள்ளதாக, அந்நாட்டின் அதிபா் கய் பாா்மேலின் தெரிவித்தாா்.

தில்லி ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டில் வியாழக்கிழமை பங்கேற்ற அவா், பிரதமா் மோடியுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தில்லி ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு, குறிப்பிடத்தக்க மைல்கல். அடுத்த உச்சிமாநாட்டை ஸ்விட்சா்லாந்து நடத்தவுள்ளது. இதன் மூலம், எண்ம கொள்கை மற்றும் விதிகள் அடிப்படையிலான சா்வதேச ஒழுங்குமுறையை உறுதி செய்வதில் எங்களின் நிலைப்பாடு வலுப்படும்‘ என்றாா் பாா்மேலின்.