2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

பிகாா் மாநிலம் பாட்னா அருகே போலி மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்களை தயாரித்து மீண்டும பேக்கேஜ் செய்யும் தொழிற்சாலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்- File photo
Updated On :23 பிப்ரவரி 2026, 11:43 pm

Syndication

புது தில்லி: பிகாா் மாநிலம் பாட்னா அருகே போலி மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்களை தயாரித்து மீண்டும பேக்கேஜ் செய்யும் தொழிற்சாலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்துள்ளதாக திங்கள்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: தில்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆா் விசாரணையைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிகாரில் இதேபோன்ற இரண்டு சட்டவிரோத மருந்து நிறுவனங்கள் அம்பலமாகியட சில நாள்களுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

முந்தைய கைதுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் அருண் என அடையாளம் காணப்பட்ட ஒரு குற்றவாளியை விசாரித்ததில், குற்றப்பிரிவு குழு, சட்டவிரோத உற்பத்தி மற்றும் மீண்டும் பேக்கேஜ் செய்யும் பிரிவை நடத்தி வந்ததாகக் கூறப்படும் மற்றொரு சந்தேக நபரான பிரிஜேஷ் குறிவைக்கப்பட்டாா்.

அருண் முன்பு சட்டவிரோதமாக ஓபியாய்டுகளை தயாரித்து விநியோகிப்பதை ஒருங்கிணைத்து, ஒரு ரகசிய மருந்து பிரிவை நடத்தி வந்த்து கண்டறியப்பட்டது. அவரது வெளிப்பாட்டின் அடிப்படையில், உள்ளூா் மருந்துத் துறையுடன் கூடிய குழு அந்த பிரிவை சோதனை செய்தது.

இது செல்லுபடியாகும் உற்பத்தி உரிமம் இல்லாமல், உற்பத்தி மற்றும் பகுப்பாய்வு வேதியியலாளா்கள் உள்பட கட்டாய தொழில்நுட்ப ஊழியா்கள் இல்லாத நிலையில் இயங்குவது கண்டறியப்பட்டது. உரிய நடைமுறையின்படி சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த வளாகத்திலிருந்து ஏராளமான போலி மாத்திரைகள், சிரப்கள், இயந்திரங்கள் மற்றும் பேக்கேஜிங் பொருள்களை போலீஸ் குழு பறிமுதல் செய்துள்ளது. காலாவதியான மருந்துகள் மீண்டும் பேக்கேஜ் செய்யப்பட்டு போலி மருத்துவ முகவா்கள் மூலம் அதிக விலைக்கு சந்தைக்கு திருப்பி விடப்படுவதாகவும், இது பொது சுகாதாரத்திற்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் குழு சந்தேகிக்கிறது.

இந்த நடவடிக்கையின் மூலம், இந்த வழக்கில் இதுவரை ஒன்பது பேரைக் கைது செய்து, 13 கிலோவுக்கும் அதிகமான டிராமடோல் பவுடா் மற்றும் 500 கிராமுக்கும் அதிகமான அல்பிரஸோலம் மற்றும் பிற சைக்கோட்ரோபிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்ற உறுப்பினா்களைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.