தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சுதந்திரப் போராட்டத்திற்கான விதை

மக்களை எழுப்புவதற்காக சுவாமிஜி அளித்த மகா மந்திரமும் உண்மை விளக்கங்களும் சுதந்திரப் போராட்டத்திற்கும் விதை ஆயிற்று.

News image
Updated On :9 ஜனவரி 2014, 12:08 pm

மக்களை எழுப்புவதற்காக சுவாமிஜி அளித்த மகா மந்திரமும் உண்மை விளக்கங்களும் சுதந்திரப் போராட்டத்திற்கும் விதை ஆயிற்று. நமது சுதந்திரப் போராட்டத்தில் பலவிதமான போக்குகளைக் கொண்ட மாமனிதர்கள் ஈடுபட்டார்கள். மகாத்மா காந்தி, கோபால கிருஷ்ண கோகலே, சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற மிதவாதிகள் பால கங்காதர திலகர், சுபாஷ் சந்திர போஸ் போன்ற மிதவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் பிபின் சந்திர பால், அரவிந்தர் தேச பந்து சித்தரஞ்சன் தாஸ், பாரதியார், வ.வே.சு ஐயர் சுப்பிரமணிய சிவா, தென்னாட்டு சுபாஷ் என்ற போற்றப்பட்ட முத்துராமலிங்க தேவர் போன்றோர் இவர்கள் அனைவருக்கும் தூண்டுதலாக இருந்தவர் சுவாமிஜி என்பது அவர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை ஆகும். இனி, தீவிரவாதிகளும் கூட சுவாமிஜியின் கருத்துக்களை அச்சிட்டு வினியோகித்தார்கள்! இதனால்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் ராமகிருஷ்ண மிஷனையே சந்தேகக் கண்ணுடன் பார்க்க நேர்ந்தது என்பது வேறு விஷயம்!

இவ்வாறு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரிலும் தாய்நாட்டுப்பற்றை ஊட்டி அவர்களைத் தாய் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபடத் தூண்டியவர் சுவாமிஜி.அதனால்தான் மகாத்மா காந்தி, 'விவேகானந்தர் இலக்கியத்தை நான் மிகவும் ஆழ்ந்து படித்துள்ளேள். அவருடைய படைப்புகளைப் படித்த பிறகு எனக்கு என்தாய்நாட்டின் மீதுள்ள பற்று ஆயிரம் மடங்கு பெருகியுள்ளது என்றார் ஜவஹர்லால்நேரு, விவேகானந்தர் சாதாரணமாக நாம் கொள்கின்ற பொருளில் உள்ள ஓர் அரசியல்வாதி அல்ல. ஆனால் புதிய இந்தியாவின் தேசிய இயக்கத்தை ஆரம்பித்த முன்னோடிகளில் அவர் ஒருவர் என்பதில் ஐயமில்லை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.