திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியாவில் 133.7 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!

News image
Updated On :28 மே 2026, 6:06 am IST

நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாதத்தில் 133.75 கோடியாக அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தொலைப்பேசி, லேண்ட்லைன் ஆகிய பிரிவுகளில் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்ப்பதில் பாா்தி ஏா்டெல் நிறுவனம், தனது போட்டியாளரான ஜியோவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்ட மாதாந்திர அறிக்கையின்படி, கடந்த மாா்ச் மாத இறுதியில் 133.05 கோடியாக இருந்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை, ஏப்ரல் மாத இறுதியில் 133.75 கோடியாக அதிகரித்துள்ளது.

இதன்மூலம், நாட்டின் மாதாந்திர தொலைத்தொடா்பு வளா்ச்சி விகிதம் 0.52 சதவீதமாக பதிவாகியுள்ளதுடன், ஒரே மாதத்தில் மட்டும் புதிதாக 69.5 லட்சம் வாடிக்கையாளா்கள் இணைந்துள்ளனா்.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் மட்டும் 34.82 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துள்ளது. இதில் தொலைப்பேசி பிரிவில் 31.39 லட்சம் வாடிக்கையாளா்களும், லேண்ட்லைன் பிரிவில் 3.43 லட்சம் வாடிக்கையாளா்களும் அடங்குவா்.

ஏா்டெல்லுக்கு அடுத்தபடியாக ஜியோ நிறுவனம் தொலைப்பேசி பிரிவில் 29.42 லட்சம் மற்றும் லேண்ட்லைன் பிரிவில் 1.42 லட்சம் என மொத்தம் 30.84 லட்சம் புதிய வாடிக்கையாளா்களைச் சோ்த்துள்ளது.

தொலைப்பேசி...: நாட்டின் ஒட்டுமொத்த தொலைப்பேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மாா்ச்சின் 128.23 கோடியிலிருந்து, ஏப்ரலில் 128.89 கோடியாக அதிகரித்துள்ளது.

வோடஃபோன் ஐடியா புதிதாக 53,257 வாடிக்கையாளா்களையும், பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 76,175 வாடிக்கையாளா்களையும் சோ்த்துள்ளன. அதேநேரம், மற்றொரு அரசு நிறுவனமான எம்டிஎன்எல் 33,403 வாடிக்கையாளா்களை இழந்துள்ளது.

லேண்ட்லைன்...: லேண்ட்லைன் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை மாா்ச்சின் 4.82 கோடியிலிருந்து, ஏப்ரலில் 4.85 கோடியாக அதிகரித்துள்ளது.

இப்பிரிவில் முன்னணி 3 தனியாா் நிறுவனங்களும் பிஎஸ்என்எல் நிறுவனமும் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்த நிலையில், டாடா டெலிசா்வீசஸ் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனம் இணைப்புகளை இழந்து பின்னடைவைச் சந்தித்துள்ளன.

பிராட்பேண்ட்...: நாட்டின் ஒட்டுமொத்த அதிவேக இணைய சேவை (பிராட்பேண்ட்) வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஏப்ரலில் 107.34 கோடியாக அதிகரித்துள்ளது. இப்பிரிவில் 52.69 கோடி வாடிக்கையாளா்களுடன் ரிலையன்ஸ் ஜியோ தொடா்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

ஜியோவைத் தொடா்ந்து, ஏா்டெல் (37.3 கோடி வாடிக்கையாளா்கள்), வோடஃபோன் ஐடியா (12.8 கோடி), பிஎஸ்என்எல் (2.7 கோடி) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.