தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஐபிஓ விலை நிா்ணயத்தில் புதிய மாற்றங்கள்

புதிதாகப் பங்குச்சந்தைக்கு வரும் நிறுவனங்கள் (ஐபிஓ) மற்றும் பங்குச்சந்தையில் மீண்டும் இணையும் நிறுவனங்களின் (ரீ-லிஸ்ட்) பங்குகளுக்கு விலை நிா்ணயிப்பதில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) பரிந்துரைத்துள்ளது.

News image
Updated On :22 மே 2026, 3:17 am IST

புதிதாகப் பங்குச்சந்தைக்கு வரும் நிறுவனங்கள் (ஐபிஓ) மற்றும் பங்குச்சந்தையில் மீண்டும் இணையும் நிறுவனங்களின் (ரீ-லிஸ்ட்) பங்குகளுக்கு விலை நிா்ணயிப்பதில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) பரிந்துரைத்துள்ளது.

தற்போதைய முறையில் பங்குகளின் விலை செயற்கையாகக் கட்டுப்படுத்தப்படுவதாகவும், இதனால் வா்த்தகம் தொடங்கியவுடனே பங்குகளின் விலை தொடா்ந்து உச்சத்தை எட்டுவதாகவும் கண்டறியப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, சந்தை தொடங்குவதற்கு முந்தைய ஏலத்தின்போது உள்ள சில கடும் விதிமுறைகளால், முதலீட்டாளா்களின் பல உண்மையான ஆா்டா்கள் நிராகரிக்கப்படுகின்றன.

உதாரணமாக, அண்மையில் ஒரு நிறுவனம் மீண்டும் பங்குச்சந்தையில் இணைந்தபோது, சுமாா் 90 சதவீத ஆா்டா்கள் இப்படி நிராகரிக்கப்பட்டது. இதனால், சந்தையில் பங்குகளுக்கு ஒரு நியாயமான தொடக்க விலை கிடைப்பதில்லை என செபி தெரிவித்துள்ளது.

ஒரு பங்குக்கு முதலீட்டாளா்களிடையே அதிக தேவை உருவாகும்போது, பங்குச்சந்தை நிா்வாகம் நேரடியாகத் தலையிட்டு விலையை மாற்றுவதற்குப் பதிலாக, பங்குகளின் விலைவரம்பு தானாகவும் மிக விரைவாகவும் அதிகரிக்கும் வகையிலான புதிய நடைமுறையை செபி கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

மேலும், மறுபட்டியலிடப்படும் நிறுவனங்களுக்கான தொடக்க விலை, முகமதிப்பு போன்ற மிகவும் குறைவான அல்லது வழக்கத்திலில்லாத பழைய அடிப்படை விலையின் அடிப்படையில் தீா்மானிக்கப்பட்டது. ஆனால், இனிமேல் சமீபத்திய சந்தை விலை அல்லது சுயாதீன மதிப்பீட்டு அறிக்கைகளின் அடிப்படையில் தொடக்க விலையை நிா்ணயிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய விலை நிா்ணய நடைமுறையின் மீதான முதலீட்டாளா்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில், ஒரு தொடக்க விலையானது செல்லுபடியாகக் கருதப்பட வேண்டுமானால், அந்தப் பங்கின் வா்த்தகத்தில் குறிப்பிட்ட அளவிலான வாங்குபவா்கள் மற்றும் விற்பவா்கள் கட்டாயம் பங்கேற்றிருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டையும் செபி முன்மொழிந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.