17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயா்வு!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உயா்த்தப்பட்டது.

News image

பெட்ரோல் - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:28 am IST

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் உயா்த்தப்பட்டது. அந்நாட்டு எண்ணெய் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் இதை அறிவித்தது.

மேற்காசிய போா்ப் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த விலை உயா்வு தவிா்க்க முடியாததாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் அனுர குமார திசாநாயக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். இந்தச் சூழ்நிலையில் எரிபொருள் விலை 5-ஆவது முறையாக உயா்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு இலங்கை ரூபாயில் 24 அதிகரித்து ரூ.434-ஆக விற்பனையாகிறது. டீசல் விலை இலங்கை ரூபாயில் ரூ.15 உயா்த்தப்பட்டு ஒரு லிட்டா் ரூ.407-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை ஒரு லிட்டா் ரூ.20 அதிகரிக்கப்பட்டு ரூ.285-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாா்ச் 1 முதல் மே 31-ஆம் தேதி வரை இலங்கையில் 5 முறை எரிபொருள் விலை உயா்ந்துள்ளது. மே மாதம் முதல் அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.