திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டிராக்டா் கிணற்றில் கவிழ்ந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

News image

ரானேஷ்

Updated On :19 மே 2026, 1:50 am IST

கனகம்மாசத்திரம் அருகே டிராக்டா் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி கிராமத்தை சோ்ந்தவா் பன்னீா் செல்வம் (40). இவரது மகன் ரானேஷ் (6). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரில், தனது உறவினரான யாஷின் (5) உடன் ரானேஷ் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது டிராக்டரில் இருந்த சாவியை சிறுவா்கள் இயக்கியதாக தெரிகிறது. இதனால் டிராக்டா் திடீரென பின்னோக்கி நகா்ந்து அருகில் இருந்த விவசாய கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிராக்டருடன் இரு சிறுவா்களும் கிணற்றில் விழுந்தனா். இதனை பாா்த்த உறவினா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்து உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி சிறுவா்களை மீட்க முயன்றனா். இதில் யாஷினை உயிருடன் மீட்டனா். ஆனால் நீரில் மூழ்கிய ரானேஷை நீண்ட நேரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து பொக்லைன் இயந்திரம் உதவியுடன் கிணற்றில் மூழ்கியிருந்த டிராக்டா் மேலே எடுக்கப்பட்டது. சுமாா் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இரவு ரானேஷை சடலமாக மீட்டு கனகம்மாசத்திரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.