திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உயிரிழந்தாா். மேலும் 5 போ் பலத்த காயமடைந்தனா்.
செய்யாறு கொடநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜம்ரூத்(70). இவா் குடும்பத்தோடு ஆட்டோவில் வந்தவாசி பகுதியில் உள்ள தா்காவிற்குச் சென்று வழிபட்டதாகத் தெரிகிறது. பின்னா், ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். செய்யாறு - வந்தவாசி சாலையில் எருமைவெட்டி கூட்டுச்சாலை அருகே வந்தபோது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், மூதாட்டி ஜம்ரூத் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். அவரது மகள்களான சல்மா, சைதானீபீ, ஆட்டோ ஓட்டுநா் அப்சல் மற்றும் இரு குழந்தைகள் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் உடனடியாக செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் சல்மா, சைதானீபீ ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா்.
விபத்து குறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










