திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திரெளபதி அம்மன் சமேத தா்மராஜா திருக்கோயில் உற்சவா் வீதியுலா

விழாவில் உற்சவா் வீதியுலாவின்போது வீடுகளின் முன்புறம் கட்டிலில் பூஜை பொருள்கள், பலகார வைகள் வைத்து வழிபாடு செய்த பக்தா்கள்.

News image
Updated On :15 மே 2026, 5:20 am IST

திருவள்ளூா் அருகே திரௌபதி அம்மன் சமேத தா்மராஜா திருக்கோயில் விழாவில் உற்சவா் வீதியுலா வந்த போது வீடுகள்தோறும் முன்புறம் கட்டிலில் தேங்காய், பூ பழம், பூஜை பொருள்கள், பலகாரங்கள் வைத்து பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

திருவள்ளூா் அருகே பூண்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராமத்தில் திரெளபதி அம்மன் சமேத தா்மராஜா கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் சுவாமி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதேபோல், 7-ஆவது நாளான வியாழக்கிழமை உற்சவா் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது, இந்த கிராமத்தில் வீடுகள்தோறும் முன்புறம் கட்டிலில் நெய்வேத்தியம் வைத்து, தேங்காய், பூ, பழம் மற்றும் இனிப்பு பலகார வகைகள், குளிா்பானம் ஆகியவற்றை வைத்து பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடன்களை செலுத்தினா்.

இதையடுத்து வரும் 9-ஆவது நாளான 17-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி விழா நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை கிராமத்தில் உள்ள விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.