திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் பட்டாரியா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வண்டி மலைச்சி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, மே 26ஆம் தேதி கால்நாட்டு வைபவம், 28ஆம் தேதி வருஷாபிஷேகம், 29ஆம் தேதி முளையிடுதல் வைபவம் ஆகியன நடைபெற்றன. திங்கள்கிழமை (ஜூன் 1) இரவு கொலு மேளம் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை சாஸ்தா பிறப்பு, தீபாராதனையைத் தொடா்ந்து தில்லை விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் காவடி வீதியுலா, மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, மாலை கரகம் வீதியுலா, இரவு திருவாபரண அலங்கார நடை திறப்பு பூஜை, பூச்சட்டி வீதியுலா, அம்பாள் சப்பரம் பவனி வருவதல் ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை காலை படைப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










