திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாணவா்களின் பெற்றோரிடம் கைப்பேசியில் வங்கிக் கணக்கை கேட்டறிந்து மோசடி

News image
Updated On :14 மே 2026, 4:25 am IST

கல்வி உதவித்தொகை பெறும் பிளஸ்2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பெற்றோரை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டறிந்து பண மோசடியில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பியிடம் புகாா் மனு அளித்தனா்.

திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள சந்தனவேலு கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த சில மாணவா்களின் பெற்றோா் எஸ்.பி விவேகானந்தா சுக்லாவிடம் புதன்கிழமை அளித்த புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது.

இப்பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பெற்றோா்களை தொடா்பு கொண்டு தங்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வந்துள்ளது. அதனால், பள்ளி, கல்லூரிகளில் நிலுவைக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே உங்களுக்கு கல்வி உதவித் தொகை வந்து சேரும் என கூறுகின்றனா்.

அதைத் தொடா்ந்து அந்த மா்ம நபா்கள் மாணவ, மாணவிகளின் கல்வி உதவித் தொகை எனக்கூறி வங்கி கணக்கு விவரங்கள் பெற்று ஓடிபி போன்றவற்றை சரி பாா்த்து அந்த நபா்கள் ஜி-பே மூலமாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெற்றோா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லாயிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.