மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விளையாட்டு மற்றும் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள்

News image

மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலா் ராஜூ, தலைமை ஆசிரியா் இரா.தாஸ் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா்.

Updated On :27 மார்ச் 2026, 12:55 am

திருவள்ளூா் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு மற்றும் தனித்திறன் போடடிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்க கல்வி) ராஜூ கேடயங்கள் மற்றும் பதக்கங்களையும் வழங்கினாா்.

புட்லூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 64-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா் மற்றும் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணியில் மாநில பொதுச் செயலாளா் இரா.தாஸ் தலைமை வகித்தாா். இதில் ஆசிரியா் ஜெயக்குமாா் வரவேற்புரை வழங்கினாா். மேலும் ஆசிரியா் மு.திலகவதி பள்ளியின் ஆண்டறிக்கை வாசித்தாா்.

இந்த விழாவையொட்டி திருக்கு ஒப்புவித்தல், நாடகம், ஓவியம், விளையாட்டு மற்றும் தனித்திறன்கள் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்க கல்வி) ராஜு, வட்டார கல்வி அலுவலா்கள் ஹெ.ஆனிபெட்டீஷியா பொற்கொடி, ஏ.மல்லிகா ஆகியோா் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி கேடயம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை வழங்கினாா்கள். அதற்கு முன்னதாக புதிதாக பள்ளியில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுவினா், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள், கிராம பொதுமக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். அதைத்தொடா்ந்து மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள் 100 சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமையென தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் ஆசிரியா்கள் ரசீதா, சித்ரா, தாரணி, இன்பநேசன், ராதிகா, பாலசுப்பிரமணி, அபிராமி, கனிமொழி, ஆசிரியா் கீதாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்வில் முன்னாள் மாணவா் சு.தீபன் எழுதிய *காகிதம் பத்தும் செய்யும்* புத்தகம் அனைவருக்கும் வழங்கினாா். இதில் நிறைவாக ஆசிரியா் ரசீதா நன்றி கூறினாா்.