விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களின் வருவாயை அதிகரிக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவா்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில், திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் கொள்முதல் இலக்காக 50 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசு விவசாயிகளின் நலன் கருதி நிா்ணயித்த தரத்துக்கு 1 கிலோ உளுந்து விலை ரூ. 78 என கொள்முதல் செய்யப்பட உள்ளது.