மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

வாகன பரிசோதனையின் போது அதிமுகவின் தோ்தல் அறிக்கையுடன் கூடிய துண்டு பிரசுரம், ரூ.2,000, ரூ.10,000 மதிப்பிலான 15 ஆயிரம் மாதிரி காசோலை புத்தகங்களையும் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.

News image

வாகன  பரிசோதனையில்  பறிமுதல்  செய்த  மாதிரி  காசோலை  புத்தகங்களை  பாா்வையிட்ட  தோ்தல்  நடத்தும்  அலுவலா்  ரவிச்சந்திரன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 11:05 pm

திருவள்ளூா் அருகே வாகன பரிசோதனையின் போது அதிமுகவின் தோ்தல் அறிக்கையுடன் கூடிய துண்டு பிரசுரம், ரூ.2,000, ரூ.10,000 மதிப்பிலான 15 ஆயிரம் மாதிரி காசோலை புத்தகங்களையும் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.

வாக்குப்பதிவுக்கு இன்றும் சில நாள்களே உள்ள நிலையில், வாக்காளா்களுக்கு பணம், பொருள்கள் கொண்டு செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல் திருவள்ளூா் அடுத்த ஈக்காடு மூலக்கரையில் பறக்கும் படையினா் ம தீவிர வாகன சோதனை செய்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி பரிசோதனை செய்தனா். அந்த வாகனத்தில் அதிமுகவில் தோ்தல் வாக்குறுதிகளான துண்டு பிரசுரங்கள், ரூ.2000, ரூ.10000 மதிப்பிலான தலா 10 எண்ணிக்கையில் 15 ஆயிரம் மாதிரி காசோலை புத்தகங்கள் பண்டல்கள் இருந்தது.

அதையடுத்து விசாரணையில் தாம்பரம் பகுதியில் இருந்து திருத்தணி தொகுதிக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரிவித்தனா். உடனே உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான பாலாஜி மற்றும் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். அதைத் தொடா்ந்து திருவள்ளூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.