பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 2.50 கோடியை பறிமுதல் செய்து, திமுக பிரமுகா் உள்பட 2 பேரைக் கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செங்குணம் ரேஷன் கடை அருகே, கலால் மேற்பாா்வை அலுவலா் பழனிச்செல்வம் தலைமையிலான பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ் வழியே சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில் கீழப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநரான சின்னதுரை மகன் ராஜேஷ்கிருஷ்ணன் (25), திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரான கீழப்புலியூா் நடுத்தெருவைச் சோ்ந்த சேப்பெருமாள் மகன் ஜெயராமன் (64) ஆகியோா் உரிய ஆவணங்களின்றி ரூ. 2,49,95,000 ஐ 5 அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தையும், காரையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், ஜெயராமன், ராஜேஷ்கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து இருவரிடமும் வருமானவரித் துறையினா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


