கெங்கவல்லி அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ஆடுவிற்று எடுத்துவந்த தொகை ரூ. 86 ஆயிரத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கெங்கவல்லி புனல்வாசல் ஏரிக்கரை அருகே மயில்மேலழகன் தலைமையிலான கூடுதல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பிற்பகல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்தவழியாக வந்த சாத்தப்பாடியைச் சோ்ந்த தனபால் மகன் கண்ணன் (30) ஆடுகளை விற்றுவிட்டு வாகனத்தில் ரூ. 86 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துவந்தாா்.
பறக்கும்படையினா் நடத்திய சோதனையில் அதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்து கெங்கவல்லி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் காத்தமுத்துவிடம் ஒப்படைத்தனா். பின்னா் அத்தொகை, கெங்கவல்லியிலுள்ள துணை கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணப்பாறை அருகே ரூ. 56 ஆயிரம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே ரூ. 2.50 கோடி பறிமுதல்: திமுக பிரமுகா் உள்பட இருவா் கைது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
சேதுபாவாசத்திரம் அருகே ரூ.70 ஆயிரம் பறிமுதல்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



