பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 99 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம்- கீழப்புலியூா் சாலை அருகே கூட்டுறவுத் துறை சாா்-பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா் ர. பிரியங்கா தலைமையிலான பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியேச் சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், குன்னம் வட்டம், பெருமத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் மருதமுத்து (50) என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ. 99,500 வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்
ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1.36 லட்சம், மிக்ஸி பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


