மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த மளிகைக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:01 pm

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த மளிகைக்கடைக்காரா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே நெடும்பரம் பனப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஹேமாத்திரி கடமனேனி (52) (படம்). இவா் திருவள்ளூா் பூங்கா நகா் பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை தனது கடையிலிருந்து புறப்பட்டு நெடும்பரம் பனப்பாக்கம் கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். கைவண்டூா் பெட்ரோல் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த பொக்லைன்

வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹேமாத்திரி கடமனேனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.