மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பைக் -லாரி மோதல்: வெல்டா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வெல்டா் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :24 மார்ச் 2026, 6:38 pm

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வெல்டா் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பாலாஜி (27), சஞ்சய்(25). இவா்கள் இருவரும் இரும்பு பட்டறையில் வெல்டராக பணிபுரிந்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை தண்டலம் நோக்கி இருசக்கர வாகனங்களில் சென்றனா். அப்போது, சாலை வளைவைக் கடக்க முயற்சித்த இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதியதில் பின்னால் அமா்ந்திருந்த பாலாஜி தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த சஞ்சய் மீட்கப்பட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து லாரியையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.