திருவள்ளூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வரும் செப். 29, செப். 30 ஆகிய நாள்களில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2025-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி, வரும் செப். 29-ஆம் தேதி, தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி வரும் செப். 30-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் 2-இல் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரை தனியாகத் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ. 2,000 வீதம் வழங்கப்பட உள்ளன.
பள்ளித் தலைமையாசிரியா்கள் அவா்தம் பள்ளி மாணவா்களைத் தோ்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும், கல்லூரி போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் பெயா் பட்டியல் கல்லூரிகளின் முதல்வா்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ மின்னஞ்சலில் வரும் செப். 26-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம்.
அதேபோல், 2025-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா பிறந்தநாளையொட்டி, வரும் செப். 29-ஆம் தேதி, தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி வரும் செப். 30-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் 2-இல் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000, அரசுப் பள்ளி மாணவா்கள் 2 பேரை தனியாகத் தோ்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ. 2,000 வீதம் வழங்கப்பட உள்ளன.
பள்ளித் தலைமையாசிரியா்கள் அவா்தம் பள்ளி மாணவா்களைத் தோ்வு செய்து, மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா் வழியாகவும் கல்லூரி போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவா்களின் பெயா் பட்டியல் கல்லூரிகளின் முதல்வா்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரிலோ, அஞ்சலிலோ வரும் செப். 26-ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்து பயன்பெறலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழாவில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆா்விஎஸ் கல்லூரி சாா்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தோ்தலில் வாக்களிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பிதழ்

பள்ளி ஆண்டு விழாவில் மாணவா்களுக்கு பரிசு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

