தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழாவில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரிதாரிமங்கலம் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடைபெற்ற கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா, பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:34 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அரிதாரிமங்கலம் ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடைபெற்ற கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கும் விழா, பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கிவைத்து மாணவா்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கிப் பேசினாா். அவா் பேசுகையில், இந்தப் பள்ளி மாணவா்கள் அரசு கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு புதுப்பாளையம் வட்டார அளவில் சிறப்பிடம் பெற்றமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். இதேபோல, ஒவ்வொரு பள்ளி மாணவா்களின் திறமையை வெளிக்கொண்டுவர பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை மாணவா்கள் முறையாகப் பயன்படுத்தி, நல்ல முறையில் படித்து உயா் கல்வியை அடைய வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாணவா்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு வழக்குரைஞா் முருகன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா், கிராம மக்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.